பாரத சாரண சாரணியர் மாணவர்களுக்கு இராஜ்யபுரஸ்கார் ஆளுநர் விருது

பாரத சாரண சாரணியர் மாணவர்களுக்கு

திருத்திய சோபன் பயிற்சி முகாமில் ராஜ்ய புரஸ்கார் ஆளுநர் விருது


நவம்பர் 17, இராமநாதபுரம்

இராமநாதபுரம் இன்ஃபண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இராமநாதபுரம் கல்வி மாவட்ட சாரண சாரணிய மாணவர்களுக்கு 3 நாட்கள் திருத்திய சோபன் பயிற்சி நவம்பர் 15 வெள்ளி கிழமை முதல் நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை வரை நடை பெற்றது.

ராஜ்யபுரஸ்கர் ஆளுநர் விருது: 


நவம்பர்16 தேதி  பயிற்சி முகாமில் 2018-19 ஆம் ஆண்டு இராஜ்யபுரஸ்கார் விருதுக்கான சோதனை தேர்வில் வெற்றி பெற்று, தேர்வு செய்யப்பட்ட இராமநாதபுரம் மற்றும் மண்டபம் கல்வி மாவட்ட சாரண சாரணிய 84 மாணவர்களுக்கு ராஜ்யபுரஸ்கார் விருது கொடுக்கப்பட்டது.


விருது விழாவில் இராமநாதபுரம்  மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட சாரண சாரணிய ஆணையாளர் பரிமளா ஆண்டனி அவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்  பால் கண்ணன், மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் தட்சணாமூர்த்தி,  மண்டபம் சாரண சாரணிய செயலாளர் மகாலட்சுமி மற்றும் துணை செயலாளர் ஜெரோம் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்வி அலுவலர் முத்துச்சாமி மாணவர்களுக்கு ரஜ்யபுரஸ்கார் ஆளுநர் விருது வழங்கி வாழ்த்தினர்.


முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட சாரண சாரணிய  செயலாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார். சாரண ஆசிரியர் சீலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மண்டபம் மாவட்ட துணை செயலாளர் ஜெரோம் நன்றி கூறினார்.

 திருத்திய சோபன் பயிற்சி

 இராமநாதபுரம் கல்வி மாவட்டம்:




இராமநாதபுரம் கல்வி மாவட்ட சாரண சாரணிய மாணவர்களுக்கான மூன்று நாள் திருத்திய சோபன் பயிற்சி முகாமில் மாநில பயிற்றுநர் எபினேசர் பயிற்சியில் 20 மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 110 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


இப்பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு சாரணர் இயக்கம், பேடன் பவுல் வரலாறு, சாரணர் இயக்க பாடல்கள்,உடற்பயிற்சி, முதலுதவி சிகிச்சை முறைகள்,தீ தடுப்பு முறைகள், கயிர் முடிச்சுகள், ஆக்கல் கலை, மதிப்பீடு கலை, வரைபட கலை, சமிக்கைகள், சமையல் கலை, கூடாரம் அமைத்தல், நாட்டு பற்று, சமுதாய மக்கள் பணி, தலைமை பண்பு, சகிப்பு தன்மை, குழு உணர்வு மற்றும் பிறருடன் நட்பு பாராட்டுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.


மேலும் மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகள் பயிற்சி அளிக்கபட்டது. மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

 தீக்களியட்டம் Camp Fire:



இரண்டாம் நாள் முடிவில் கேம்ப் பயர் நடைபெற்றது. நான்கு திசைகளில் இருந்து  தேவதைகள் வந்து நற்செய்தி கூறி கையில் மெழுகுவர்த்தி ஏற்றி , நடுவில் விறகு கட்டைகளுக்கு தீப்பந்தம் ஏற்றுவர். தீயை சுற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கைகோர்த்து நடமாடுவர்கள். பிறகு மாணவர்கள் அனைவரும் இணைத்து கலைநிகழ்ச்சி அளித்தனர். நிகழ்ச்சியில் நடனம்,நாடகம், பாடல், உரையாடல், சிலம்பம் மற்றும் யோகா நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். திருத்திய சோபன் பயிற்சிகான சான்றிதழ் வழங்கப்பட்டது.

சர்வ சமய வழிபாடு:


மூன்றாவது நாள் ஞாயிறு அன்று காலையில் சர்வ சமய வழிபாட்டு நடைபெற்றது. அனைத்து மதங்களையும் சமம்மாக மதிக்க வேண்டும் மற்றும் என்ற அரத்தை போதிக்க நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சியின் இறுதி நாள் அன்று சர்வ சமய வழிபாட்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வழிபாட்டில் அனைத்து மத பாடல், புனித நூல் வாசிப்பு, பிராத்தனை மற்றும் போதனை நடைபெறும்.


பயிற்சி முகாமிற்கு அனைத்து பணிகளையும் மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையர்கள் ஜெனோவ, உமா, துணை செயலாளர் கோபிநாத், காமாட்சி  செய்தனர்.

மண்டபம் கல்வி மாவட்டம்:

இராமநாதபுரம் ஆண்ட்ரூஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மண்டபம் கல்வி மாவட்ட சராண சாரணிய மாணவர்களுக்கு திருத்திய சோபன் பயிற்சி நவம்பர் 15 முதல் நவம்பர் 17 வரை 3 நாட்கள் நடைபெற்றது.


மேலும் 15 க்கும் மேற்பட்ட  அரசு, அரசு  உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 86 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மாநில பயிற்றுனர்கள் செல்வி மற்றும் பீட்டர் ஆரோக்கியராஜ் பயிற்சி அளித்தனர்.  பயிற்சியில் கலைகள், தீ அணைப்பு முறைகள், கூடாரம் அமைத்தல், முடிச்சுகள், பாரம்பரிய விளையாட்டுகள், தீக்களியாட்டம், சர்வ சமய வழிபாடு நடைபெற்றது.


விழாவில் முன்னதாக மாவட்ட துணை செயலாளர் ஜெரோம் வரவேற்று பேசினார். சாரண ஆசிரியர் செலஸ்டின் மகிமை ராஜ் நன்றி கூறினார். பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட பயிற்சி ஆணையர் அருள்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மகாலட்சுமி செய்தனர். 

Comments

Popular posts from this blog

சாரணர் இயக்கத்தில் Wood Badge Holders மற்றும் சாரணர் பயிற்சியாளர்க்கு ஒரு நாள் பணிமனை