பாரத சாரண சாரணியர் மாணவர்களுக்கு இராஜ்யபுரஸ்கார் ஆளுநர் விருது
பாரத சாரண சாரணியர் மாணவர்களுக்கு திருத்திய சோபன் பயிற்சி முகாமில் ராஜ்ய புரஸ்கார் ஆளுநர் விருது நவம்பர் 17, இராமநாதபுரம் இராமநாதபுரம் இன்ஃபண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இராமநாதபுரம் கல்வி மாவட்ட சாரண சாரணிய மாணவர்களுக்கு 3 நாட்கள் திருத்திய சோபன் பயிற்சி நவம்பர் 15 வெள்ளி கிழமை முதல் நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை வரை நடை பெற்றது. ராஜ்யபுரஸ்கர் ஆளுநர் விருது: நவம்பர்16 தேதி பயிற்சி முகாமில் 2018-19 ஆம் ஆண்டு இராஜ்யபுரஸ்கார் விருதுக்கான சோதனை தேர்வில் வெற்றி பெற்று, தேர்வு செய்யப்பட்ட இராமநாதபுரம் மற்றும் மண்டபம் கல்வி மாவட்ட சாரண சாரணிய 84 மாணவர்களுக்கு ராஜ்யபுரஸ்கார் விருது கொடுக்கப்பட்டது. விருது விழாவில் இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட சாரண சாரணிய ஆணையாளர் பரிமளா ஆண்டனி அவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் பால் கண்ணன், மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் தட்சணாமூர்த்தி, மண்டபம் சாரண சாரணிய செயலாளர் மகாலட்சுமி மற்றும் துணை செயலா...